வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 18 மே 2017 (04:05 IST)

ஐபிஎல் கிரிக்கெட்: ஷாருக்கானின் கொல்கத்தா அணி வெற்றி

நேற்றைய பிளே ஆஃப் போட்டியில் வருணபகவான் புண்ணியத்தில் சன்ரைசஸ் அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டம் அந்த அணியின் பக்கம் இல்லாததால் இரவு 1 மணி அளவில் மீண்டும் ஆட்டம் தொடங்கியது.



 


ஐதரபாத் அணி 128 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கொல்கத்தாவுக்கு டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 6 ஓவர்களில் 48 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு அளிக்கப்பட்டது.

இந்த இலக்கை ஷாருக்கானின் கொல்கத்தா அணி 5.2 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து எடுத்துவிட்டதால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. எனவே நாளை இதே பெங்களூரு மைதானத்தில் கொல்கத்தா மும்பை அணியுடன் மோதும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் புனே அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.