வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 3 மே 2018 (21:55 IST)

178 ரன்கள் கொல்கத்தாவுக்கு இலக்கு கொடுத்த சென்னை

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதி வருகின்றன. கொல்கத்தாவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீச முடிவு செய்ததால் சென்னை அணி முதலில் களத்தில் இறங்கியது
 
சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்துள்ளது. வாட்சன் 36 ரன்களும், தோனி 43 ரன்களும், ரெய்னா 31 ரன்களும் எடுத்தனர்
 
கொல்கத்தா தரப்பில் சாவ்லா மற்றும் நரேன் தலா இரண்டு விக்கெட்டுக்களையும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
 
இந்த நிலையில் 178 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சற்று நேரத்தில் கொல்கத்தா அணி களமிறங்கவுள்ளது