1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 20 நவம்பர் 2014 (14:24 IST)

சூப்பர் லீக் கால்பந்து போட்டி: புள்ளிப்பட்டியலில் சென்னை அணி முதல் இடம்

சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
 
ஐபிஎல் வரிசையில் தற்போது புதியதாக இணைந்துள்ளது ஐ.எஸ்.எல். இதில் முதற்கட்டமாக 8 அணிகள் விளையாடி வருகின்றன. இந்நிலையில் இப்போட்டியின் 36 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணி 3–1 என்ற கோல் கணக்கில் புனே சிட்டியை அபாரமாக வென்றது. இதன் எதிரொலியாக புள்ளிப்பட்டியலில் முதல் முறையாக சென்னை அணி முதல் இடத்தை பிடித்துள்ளது. இதனால் முதல் இடத்திலிருந்த கொல்கத்தா அணி 2 ஆவது இடத்திற்கு சரிவடைந்துள்ளது. 
 
இந்நிலையில் இப்போட்டியின் புள்ளிப்பட்டியலில் முதல் முறையாக சென்னை அணி முதல் இடத்தை பிடித்துள்ளது. இதனால் முதல் இடத்திலிருந்த கொல்கத்தா அணி 2 ஆவது இடத்திற்கு சரிவடைந்துள்ளது. 
 
மேலும் சென்னை, கொல்கத்தா அணிகள் 16 புள்ளிகள் பெற்று சமநிலையில் உள்ளது. எனினும்
கோல்கள் அடிப்படையில் சென்னை அணி 17 கோலும், கொல்கத்தா அணி 12 கோலும் அடித்திருப்பதால், சென்னை அணி முதல் இடத்திற்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.