வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 4 மார்ச் 2017 (17:42 IST)

2வது டெஸ்ட் - 189 ரன்களின் சுருண்டது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 189 ரன்களில் சுருண்டது.


 

 
பெங்களூரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. முதல் நாள் முடிவடையும் முன்பே இந்திய அணி ஆஸ்திரேலியாவின் சூழலில் சுருண்டது. 189 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா முதல் இன்னிக்ஸில் ஆல் அவுட் ஆனது.
 
தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் மட்டும் 90 ரன்கள் எடுத்தார். கேப்டன் விராட் கோலி இந்த முறையும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி சார்ப்பில் நதன் லயோன் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
 
அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியே அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் நாள் அட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 40 ரன்கள் குவித்து விக்கெட் எதுவும் இலக்காமல் உள்ளது.