வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 4 ஜூலை 2018 (07:20 IST)

ராகுல் அபார சதம்: இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில் ஏற்கனவே அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டு டி-20 போட்டிகளில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் டி-20 போட்டி நேற்று மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது
 
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத்கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் இங்கிலந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 159 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான பட்லர் 60 ரன்களும், ராய் 30 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் குல்தீப் யாதவ் மிக அபாரமாக பந்துவீசி ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
 
இந்த நிலையில் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் தவான் 4 ரன்களிலும் ரோஹித் சர்ம 32 ரன்களிலும் அவுட் ஆகினர். இருப்பினும் ராகுல் அபாரமாக விளையாடி 54 பந்துகளில் 101 ரன்கள் அடித்தார். இதில் 10 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடங்கும். இதனையடுத்து இந்திய அணி 18.2 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 
ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி ஜூலை 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.