வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (12:55 IST)

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் !கை கொடுத்த கோலி: கரை சேருமா இந்தியா...

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இரண்டாது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடக்கிறது. முத இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 326 ரன்கள் எடுத்தது. இரண்டாம்நாஅள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வீரர்கள் 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தனர் .
இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் கோலி அபாரமாக விளையாடி தனது 25 ஆவது சதத்தை பதிவு செய்தார். பிறகு 123 ரன்கள் எடுத்திருந்த போது கம்மின்ஸ் பந்தில் பெவிலியன் திரும்பினார். மற்ற இந்திய வீரர்களும் பெரிதாக சோபிக்கவில்லை.ரகானே (51 ), விஹாரி (20), பண்ட் (36) , பும்ரா (4) ரன்களில் வெளியேறினர்.
 
இந்நிலையில் இந்திய அணி 283 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. உமேஷ் யாதவ் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் நாதன் 5, ஸ்டார்க் , ஹோசல்வுட் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
 
ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் முன்னிலையில் 2 வது இன்னிங்ஸில் 33 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.