வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 25 ஜூன் 2018 (08:59 IST)

உலகக்கோப்பை கால்பந்து: கோல்மழை பொழிந்த இங்கிலாந்து: பரிதாபத்தில் பனாமா

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து அணி 6 கோல்கள் அடித்தடுத்து போட்டு கோல் மழை பொழிந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி பனாமா அணியை 6-1 என்ற கோல்கணக்கில் தோற்கடித்தது
 
இங்கிலாந்து அணி ஏற்கனவே பலம் வாய்ந்த அணியாக இருந்து வரும் நிலையில் நேற்றைய பனாமா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்கம் முதலே கோல் மழை பொழிந்தது. ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் ஸ்டோன்ஸ் முதல் கோலும், 22-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு மூலம் கேப்டன் ஹாரி கேன் ஒரு கோலும், அதன் பின்னர். 36-வது நிமிடத்தில் லிங்கார்டு கோலும், 40-வது நிமிடத்தில் ஸ்டோன்ஸ் ஒரு கோலும் பின்னர் அடுத்த நிமிடமே பெனால்டி கார்னர் வாய்ப்பின் மூலம் ஹாரி கேன் கோலும் அடித்ததால் இங்கிலாந்து அணி முதல் பாதியின் முடிவில் 5-0 என்ற கோல்கணக்கில் முன்னிலைப் பெற்றது.
 
முதல் பாதி போலவே ஆட்டத்தின் இரண்டாவது பாதி நேரத்திலும் இங்கிலாந்து கையே ஓங்கி இருந்தது. போட்டியின் 62-வது நிமிடத்தில் ஹாரி கேன் மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து அணி 6-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணியினர் அடுத்தடுத்து கோல் போட்டு வருவதை அதிர்ச்சியுடன் நோக்கிய பனாமா அணியினர் கடைசியாக  78-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தனர். இதனையடுத்து 6-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.