1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 29 ஜூன் 2017 (13:04 IST)

கோலிக்கு நோஸ் கட் கொடுத்த இன்ஜினியரிங் மாணவர்!!

அனில் கும்ப்ளே தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்படுகின்றது.


 
 
விராட் கோலி, கும்ளே இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கும்ளே தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், இன்ஜினியரிங் மாணவர் ஒருவர் இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். 
 
கல்லூரி படிப்பையே முழுமையாக முடிக்காத இவர், பயிற்சியாளர் பதவிக்கும் விண்ணபிக்க பயோடேட்டாவை தயாரித்து அனுப்பியுள்ளார். 
 
அந்த பயோடேட்டாவில், இந்திய தலைமை பயிற்சியாளரான கும்ளே பதவிவிலகியதை தொடர்ந்து அந்த பதவிக்கு நான் விண்ணப்பிக்க விரும்புகிறேன். 
 
கேப்டன் கோலிக்கு மிகப்பெரிய ஜாம்பவான்கள் பயிற்சியாளராக இருந்தல் பிடிக்காது என தெரியவந்துள்ளது. ஜாம்பவான்களால் திமிரு தனத்தை பொறுத்துக்கொள்ள முடியாது. ஆனால் என்னால் முடியும், அதனால் இந்திய அணியை சரியான பாதைக்கு என்னால் அழைத்துச்செல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என கோலியின் செயலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் எழுதியுள்ளார்.