வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 21 டிசம்பர் 2016 (16:55 IST)

கோலி தலைமையில் தோனி? ஆகாஷ் சோப்ரா சீண்டல்!!

இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தலைமையில், ஒருநாள் கேப்டன் தோனி நிச்சயம் விளையாட வேண்டிய சூழ்நிலை வரும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.


 
 
இந்தியா வந்த இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் இளம் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, வெற்றி கண்டது.
 
இந்திய கேப்டன்களில் மிகச்சிறந்த கேப்டனாக தோனி கருதப்பட்ட போதும் அவரது சமீபகால பார்ம், அவருக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில், இதனை மேலும் தூண்டிவிடும் விதமாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார். ஆகாஷ் கூறியதாவது, இந்திய அணிக்கு விராட் கோலி தொடர்ச்சியாக வெற்றிகளை கொடுத்து வருகிறார். அவரின் வேகத்தை பார்க்கும் போது, தோனிக்கு வேறு வழியில்லை. நிச்சயம் அவருக்கு கீழ் தோனி விளையாடும் நிலை உருவாகும்.

இதனை தேர்வுக்குழுவினர் தான் முடிவு செய்ய வேண்டும். 2019 உலகக கோப்பைக்கான ஏற்பாடு தோனியிடம் இல்லை என்றால், 2017 சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்னர் கோலியிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தல் தான் சரியாக வரும் என கருத்து தெரிவித்துள்ளார்.