காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு சபாநாயகர் பாராட்டு
மக்களவை கூட்டத்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு மக்களவை சார்பில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.
இது குறித்து அவர் பேசுகையில், “தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம், சஞ்ஜிதா, சுகன் தேவ், அபினவ் பிந்த்ரா, ஜித்து ராய், அமித் குமார், வினேஸ், சுஷில் குமார் உள்ளிட்டோருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
இதே போல, வெள்ளி, வெண்கலம் வென்ற வீரர்களையும் மக்களவை தனது பாராட்டுகளை தெரிவிக்கிறது. இனி வரும் போட்டிகளிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை குவிக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்“ என்று சுமித்ரா மகாஜன் பாராட்டு தெரிவித்தார்.