வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 27 அக்டோபர் 2014 (13:36 IST)

"வாங்க, வந்து பாருங்க" - கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு தோனி அழைப்பு

சென்னையில் நாளை நடைபெறவுள்ள கால்பந்துப் போட்டிக்கு இந்திய அணி கேப்டன் தோனி டிவிட்டரில் அழைப்பு விடுத்துள்ளார்.
 
8 அணிகள் பங்கேற்கும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில், சென்னை எஃப்.சி அணிக்கும், மும்பை எஃப்.சி அணிக்கும் இடையே நாளை (28.10.14) செவ்வாய் கிழமை கால்பந்துப் போட்டி நடைபெறவுள்ளது.

இந்தக் கால்பந்துப் போட்டியை காண சென்னை ரசிகர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டனும், சென்னை எஃப்.சி அணி உரிமையாளர்களில் ஒருவருமான மகேந்திர சிங் தோனி அழைப்பு விடுத்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், "உள்ளூரில் இரண்டாவது முறையாக நடைபெற இருக்கும் சென்னை எஃப்.சி அணியின்  போட்டியை காண்பதற்கு காத்திருங்கள். இறுதியாக சென்னை ரசிகர்கள் முன்னிலையில் இருக்க உள்ளேன். வாங்க வந்து பாருங்க" என்று தோனி  குறிப்பிட்டு எழுதியுள்ளார்.
 
இதற்கு அவரது ரசிகர்கள் பலபேர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் 'இறுதியாக' என்று குறிப்பிட்டுள்ளதற்கு விளக்கம் கேட்டும் எழுதியுள்ளனர். இலங்கை எதிரான கிரிக்கெட் தொடர் நடைபெற இருப்பதால் தோனி அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
சென்னையில் இதற்கு முன்னதாக கடந்த 21 ஆம் தேதி சென்னை எஃப்.சி அணியும், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை எஃப்.சி அணி 2-1 என்ற கணக்கில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.