வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (06:56 IST)

காயத்தால் தப்பித்து ஓடும் இலங்கை வீரர்கள்

இந்தியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டியிலும் தோல்வி அடைந்து தொடரை சொந்த நாட்டிலேயே இழந்த இலங்கை அணிக்கு கடும் எதிர்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த எதிர்ப்பு மூன்றாவது ஒருநாள் போட்டி நடந்த கண்டி மைதானத்தில் தெரிந்தது. இதனால் கொலை வெறியில் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர்.



 
 
இந்த நிலையில் 4வது ஒருநாள் போட்டி வரும் 31ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டியில் விளையாடாமல் தப்பித்து கொள்ள காயம் என்ற காரணத்தை இலங்கை வீரர்கள் பயன்படுத்துவதாக கூறப்பட்டது.
 
ஏற்கனவே கேப்டன் தரங்கா சஸ்பெண்ட் செய்யப்பட்டும், குணதிலகா காயம் காரணமாக வெளியே உள்ளனர். இந்த நிலையில் புதியதாக அணியில் சேர்க்கப்பட்ட சண்டிமாலும் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறுகிறார். 3வது போட்டியின்போது அவரது விரலில் காயம் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக அவர் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி ஆரம்பிப்பதற்குள் இன்னும் எத்தனை பேர் வெளியேறுகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்