வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 9 டிசம்பர் 2018 (17:01 IST)

6 விக்கெட், 219 ரன்கள்: கடைசி நாளில் ஆஸ்திரேலியாவின் இலக்கு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கடந்த 6ஆம் தேதி அடிலெய்டில் தொடங்கிய நிலையில் சற்றுமுன் 4வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஆஸ்திரேலியா வெற்றி பெற இந்திய அணி 323 ரன்கள் இலக்கு கொடுத்த நிலையில் 4வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 6 விக்கெட்டுக்கள் கைவசம் இருக்கும் நிலையில் ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 219 ரன்கள் எடுக்க வேண்டும்

இன்றைய ஆட்டத்தில் ஷமி மற்றும் அஸ்வின் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர். நாளைய இறுதி நாள் ஆட்டத்தில் ஆறு விக்கெட்டுக்களை வீழ்த்தி இந்த டெஸ்டில் இந்தியா வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்