1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (17:26 IST)

முதல் போட்டியில் இந்திய அணி முதல் பேட்டிங்

இந்தியா - ஹாங்காங் அணிகள் இடையேயான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.

 
இந்தியா உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடரின் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. நேற்று இலங்கை அணி ஆப்னாகிஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியது.
 
இந்திய இன்று தொடரின் முதல் போட்டியில் ஹாக்காங் அணியுடன் விளையாடுகிறது. டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
 
வழக்கம்போல் தொடக்க வீரர்களாக தவான், ரோகித் சர்மா களமிறங்கியுள்ளனர். ஹர்திக் பாண்டியா, ராகுல், பும்ரா ஆகியோர் இந்த போட்டியில் இடம்பெறவில்லை. அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.