வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

இரு கைகளை கூப்பி வணக்கம் செய்வது ஆன்மிக விஷயம் சார்ந்ததா...?

தமிழர்கள் மட்டுமே கைகள் கூப்பி வணக்கம் சொல்லும் வழக்கத்தை உலக அளவில் பரப்பினார்கள். இந்த வழக்கத்துக்குக் காரணங்கள் உள்ளன. நம் கலாச்சாரப்படி, ‘வணக்கம்’ என்று இரு கைகளையும் இணைத்து நெஞ்சத்துக்கு நேராக வைத்து அனைவரையும் வரவேற்போம்.
அதை மரியாதை செலுத்தும் ஒரு குறியாகக் காலம் காலமாக நாம் பின்பற்றி வருகிறோம். இறைவனை தொழும்பொழுது கைகளை இணைத்து நெற்றிவரை  வைத்து வணங்குவோம். இவற்றின் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன?
 
இரு கைகளை இணைக்கும் பொழுது, எல்லா விரல்களின் நுனியும் இணைக்கப்படுகிறது; இது நம் கண்கள், காதுகள் மற்றும் மூளையின் நினைவு நரம்புகளைத் தூண்டுகின்றன. விரல் நுனிகளை அழுத்தி நெஞ்சத்துக்கு நேராக வைப்பதன் மூலம், நாம் சந்திக்கும் நபரின் முகமும், குரலும் நம் நினைவில் பதியும்.
 
அதுபோல, கைகளை இணைத்து நெற்றிக்கு நேராக வைத்து வணங்குவது நம் எண்ணங்களை ஒருநிலைப் படுத்தி, முழுமையாகக் கவனம் செலுத்த உதவும்.
மகான்கள், சித்தர்கள் ஆகியோரை வணங்கும்போது, புருவ மத்திக்கு அருகில் கைகளை கூப்பி வணங்கவேண்டும். புருவமத்தியின் ஆக்கினை என்கிற சக்கரத்தை இது தூண்டக்கூடியது.
 
இறைவனை வணங்கும்போது, இரண்டு கைகளையும் தலைக்கு மேலே கூப்பி வணங்குதல் வேண்டும். அடிக்கடி இரண்டு கைகளையும் இணைப்பதால் மூளையின் இரண்டு பக்கங்களும் சீராகச் செயலாற்றும். அத்தோடு உடல் சக்கரங்களையும் தொடர்பு படுத்துவதால் ஏராளமான நன்மைகளை அளிக்கவல்லது  வணக்கம்.