1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 28 ஜூலை 2017 (12:22 IST)

ராகு & கேது பெயர்ச்சி - பொதுப்பலன்கள்

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பகை வீடான சிம்மம், கும்பத்தில் ராகு, கேதுவாகிய பாம்பிரண்டும் அமர்ந்து நாடெங்கும் பணப் பற்றாக்குறையை ஏற்படுத்தின. இப்போது யோகம் தரும் வீடுகளில் இவ்விரண்டு கிரகங்களும் அமர்வதால் உலகெங்கும் பணத்தட்டுப்பாடு விலகும். 


 


நிகழும் ஹேவிளம்பி வருடம், ஆடி மாதம், 11ம் நாள் வியாழக்கிழமை (27.07.2017) சுக்லபட்சத்து, பஞ்சமி திதி, உத்திரம் நட்சத்திரம், பரீகம் நாமயோகம், பாலவம் நாம கரணத்தில், ஜுவனம் நிறைந்த மந்தயோகத்தில், சனி ஹோரையில், பஞ்ச பட்சியில் காகம் அரசுத் தொழில் செய்யும் நேரத்தில் நண்பகல் மணி 12.39க்கு ஆயில்யம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் சர வீடான கடகம் ராசியில் ராகு பகவானும், அவிட்டம் நட்சத்திரம் 2ம் பாதத்தில் சர வீடான மகரம் ராசியில் கேதுபகவானும் வாக்கியப் பஞ்சாங்கப்படி பெயர்ச்சி அடைகிறார்கள். 
 
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பகை வீடான சிம்மம், கும்பத்தில் ராகு, கேதுவாகிய பாம்பிரண்டும் அமர்ந்து நாடெங்கும் பணப் பற்றாக்குறையை ஏற்படுத்தின. இப்போது யோகம் தரும் வீடுகளில் இவ்விரண்டு கிரகங்களும் அமர்வதால் உலகெங்கும் பணத்தட்டுப்பாடு விலகும். 
 
ராகுவால் ஏற்பட போகும் பலன்கள்: 
 
    கடல் வீடும், நண்டு ராசியுமான கடகத்தில் ராகு அமர்வதால் நாடெங்கும் புதிய தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். வெளிநாட்டு மோகம் மக்களிடையே குறையும். பாட்டன், பூட்டன் செய்து வந்த பாரம்பரியமான தொழில்கள் மீது இளைய தலைமுறையினருக்கு ஆர்வம் அதிகரிக்கும். கடலில் கலக்கும் கழிவுகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் வரும். கடலில் அழிந்து வரும் பவழப் பாறைத்திட்டுகள் பாதுகாக்கப்படும். மக்களின் அடிமனதில் இருந்து வரும் அச்ச உணர்வு விலகும். வாகன உற்பத்தி அதிகரிக்கும்.

எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் துறை மேம்படும். செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் உற்பத்தி அதிகரிப்பால் அவற்றின் விலை குறையும். இண்டர்நெட், மொபைல் போன் சேவைக்கான கட்டணம் அதிரடியாக குறையும். மிகக் குறைந்த செலவில் அதிக சேனல்களை தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு உருவாகும். அளவில் மிகச் சிறிய ஆனால் அதிக தொழில் நுட்பமுள்ள கேமராக்கள், ரோபோக்கள் அதிகம் வெளியாகும். 
 
காலப் புருஷ தத்துவப்படி ராகு 4ம் வீட்டில் அமர்வதால் மக்களிடையே சேமிக்கும் குணம் குறையும். வாழ்க்கையை சுக போகங்களை அனுபவித்து விட வேண்டுமென்ற வேட்கை அதிகரிக்கும். மதுபான உற்பத்தியும், அருந்துவோரின் எண்ணிக்கையும் உயரும். மாரடைப்பு நோயால் பாதிப்பு பரவலாகும். பாரம்பரிய சின்னங்கள், மலைகள், காடுகள், நதிகளை மீட்கவும், பாதுகாக்கவும் புதிய சட்டங்கள் அமலுக்கு வரும். சுற்றுச் சூழலை பாதிக்காத வண்ணம் புதிய வாகனங்கள் உற்பத்தியாகும். வாகனங்களின் விலை குறையும். வெளிர்நீலம், சில்வர்கிரே நிறங்களும், 2 மற்றும் 4ம் எண்களும் அதிக வலிமை பெறும். வாழ்க்கைத்துணையை பிரிந்திருப்போர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் பல துறைகளிலும் சாதிப்பார்கள்.

மின்சாரத் தட்டுப்பாடு குறையும். ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளை நேர்ப்படுத்த சட்டங்கள் வரும். வீட்டு வாடகை குறையும். குறைந்த விலையில் தரமான வீடுகள் கிடைக்கும். ஷேர் மார்க்கெட்டில் பங்குகளின் விலை உயரும். குடிநீர்த் தட்டுப்பாடு சரியாகும். மழை அதிகமாகும். புதிய நீர்த் தேக்க அணைகள் கட்டப்படும். விவசாயம் தழைக்கும். கிராமங்கள் வளர்ச்சியடையும். நகரங்களிலிருந்து சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோ கெமிக்கல் பொருட்களின் விலை குறையும். தங்க ஆபரணங்களின் விலை அதிகமாகும். 
 
கேதுவால் ஏற்பட போகும் பலன்கள்:
 
  கேது கும்பராசியிலிருந்து விலகி மகரத்தில் அமர்வதால் உலகெங்கும் வியாபாரம் தழைக்கும். நாடெங்கும் பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வரும். நாட்டின் பாதுகாப்பு கருதி ராணுவத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படும். பாகிஸ்தான், சீனாவுடன் போர் வரும். குறைந்த பட்ஜெட் சினிமாப் படங்கள் பிரபலமடையும். வரதட்சணை, கற்பழிப்பு உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு கடுமையான சட்டம் வரும். ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழில் நலிவடையும். அரசியலில் நாகரீகம் மெல்ல மெல்ல வரத் தொடங்கும். மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் அறிமுகமாகும். சிமெண்ட், மணல் விலை அதிகரிக்கும்.

குறைப் பிரசவங்கள், ஓரினச் சேர்க்கை அதிகமாகும். பால் விலை உயரும். ஆட்டோ மொபைல், எலக்ட்ரானிக்ஸ் துறை வளர்ச்சி அடையும். தோல் நோய் கொழுப்பு அதிகரிப்பால் மக்களின் ஆரோக்யம் குறையும். மரக்கன்றுகள் அதிகம் நடப்படும். இரண்டிற்கு மேற்பட்ட வாகனங்கள், இரண்டு குழந்தைகளுக்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றிருப்பவர்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டி வரும். வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐயின் கிடுக்குப்பிடி நடவடிக்கைள் அதிகரிக்கும். 
 
ராகு கடந்து செல்லும் பாதை:
 
27.7.2017&27.9.2017 வரை ஆயில்யம்4ல்
28.9.2017&29.11.2017 வரை ஆயில்யம் 3ல்
30.11.2017&31.1.2018 வரை ஆயில்யம் 2ல்
1.2.2018&4.4.2018 வரை ஆயில்யம 1ல்
5.4.2018&3.6.2018 வரை பூசம் 4ல்
4.6.2018&6.8.2018 வரை பூசம் 3ல்
7.8.2018&8.10.2018 வரை பூசம் 2ல்
9.10.2018&10.12.2018 வரை பூசம் 1ல்
11.12.2018&13.2.2019 வரை புனர்பூசம் 4ல்
 
கேது கடந்து செல்லும் பாதை: 
 
27.7.2017&27.9.2017 வரை அவிட்டம் 2ல்
28.9.2017&29.11.2017 வரை அவிட்டம் 1ல்
30.11.2017&31.1.2018 வரை திருவோணம் 4ல்
1.2.2018&4.4.2018 வரை திருவோணம் 3ல்
5.4.2018&3.6.2018 வரை திருவோணம் 2ல்
4.6.2018&6.8.2018 வரை திருவோணம் 1ல்
7.8.2018&8.10.2018 வரை உத்திராடம் 4ல்
9.10.18&10.12.2018 வரை உத்திராடம் 3ல்
11.12.2018&13.2.2019 வரை உத்திராடம் 2ல்
 
பரிகாரம்:
 
   மனோக்காரகனும், மாதுர்காரகனும் மற்றும் கலைகளுக்கும் உரிய கிரகமான சந்திரனின் கடக ராசியில் ராகு அமர்வதால் மறைந்து போன நம்நாட்டு பாரம்பரிய கலைகளை புதுப்பிக்க உதவுவோம். பெற்றெடுத்த தாயாரை முதியோர் இல்லத்தில் சேர்க்காமல் முடிந்த வரை காப்பாற்றுவோம். தொழிலாளி மற்றும் முதலாளித்துவத்திற்குரிய கிரகமான சனிபகவானின் மகர ராசியில் கேது அமர்வதால் பாகுபாடு பார்க்காமல் அனைவரையும் சமமாக மதித்து பழகுவோம். ஆதரவற்ற பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு உதவுங்கள்.