1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Geetha Priya
Last Updated : வெள்ளி, 13 ஜூன் 2014 (18:28 IST)

2014 குருப் பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்!

சிகரத்தைத் தொட்ட போதும் தலைக் கணம் கொள்ளாத நீங்கள், அடித்தட்டு மக்களுக்காக அயராது உழைப்பீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்துக் கொண்டு ஓரளவு வசதி, வாய்ப்புகளையும், திடீர் யோகங்களையும், பணவரவையும் தந்துக் கொண்டிருந்த குருபகவான் 13.06.2014 முதல் 04.07.2015 வரை ராசிக்கு 12-ம் வீடான விரைய ஸ்தானத்தில் மறைவதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள்.
 
பிரபலமான புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பழைய வீட்டை சிலர் இடித்து புதுப்பிப்பீர்கள். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவல் கிடைத்து சிலர் புதிதாக வீடு கட்டத் தொடங்குவீர்கள். லோன் கிடைக்கம். உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், கிரகப் பிரவேசம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகளையெல்லாம் நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். 
 
குடும்பத்தில், கணவன்-மனைவிக்குள் வரும் சின்ன சின்ன பிரச்னைகளையெல்லாம் பெரிதுப்படுத்திக் கொண்டிருக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்க்கப்பாருங்கள். எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்வது நல்லது. பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம். அவர்களின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் பற்றிய கவலைகள் வந்துப் போகும். மகளுக்கு வரன் தேடும் போது விசாரித்து திருமணம் முடிப்பது நல்லது. மகனின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். கூடாப்பழக்க வழக்கங்கள் தொற்ற வாய்ப்பிருக்கிறது. விளம்பரங்களை கண்டு ஏமாந்து சோப்பு, ஷாம்புவை மாற்ற வேண்டாம். 
 
அலர்ஜி, இன்பெக்ஷன் வரக்கூடும். மனதில் பட்டதை பளீச்சென்று பேசி மற்றவர்களின் விமர்சனத்திற்குள்ளாவீர்கள். பழைய கடனை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். மாதம் தவறாமல் அசலை செலுத்தினாலும் வட்டிக் கூடிக் கொண்டேப் போகிறதே என்று அச்சப்படுவீர்கள். வாகனத்திற்கான லைசன்ஸ், இன்சூரன்சை குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்க தவறாதீர்கள். அபராதம் கட்ட வேண்டி வரும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். பழைய இழப்புகள், ஏமாற்றங்களை அசைப் போட்டு தூக்கத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம். சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அநவாசியமாக யாருக்காகவும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். 

குரு உங்கள் சுகஸ்தானத்தை பார்ப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். அடிக்கடி பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். நல்ல காற்றோட்டம், குடிநீர் உள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். சிலர் வேறு ஊருக்கு குடிப்பெயர்வீர்கள். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பை துண்டிப்பீர்கள். குரு 6-ம் வீட்டை பார்ப்பதால் பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். பெரிய நோய் இருப்பது போன்ற பிரம்மை நீங்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். குரு 8-ம் வீட்டை பார்ப்பதால் ஆயுள், ஆரோக்யம் கூடும். வழக்குகள் சாதகமாகும். ஷேர் மூலம் பணம் வரும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.  
  
குருபகவானின் சஞ்சாரம்: 
 
13.6.2014 முதல் 28.6.2014 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியும்-அஷ்டமாதிபதியுமான குருபகவான் தன் சாரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் குலதெய்வக் கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பு வரும். பூர்வீக சொத்து கைக்கு வரும். வாகனத்தை மாற்றுவீர்கள். 
 
29.6.2014 முதல் 27.8.2014 வரை உங்களின் சஷ்டம-சப்தமாதிபதியான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பிறர் மீது நம்பிக்கையின்மை, அசதி, சோர்வு, சுபச் செலவுகள் வந்துப் போகும். திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். மறதியால் விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும். வேலைச்சுமையால் மனைவி கோபப்படுவார். பழைய கசப்பான சம்பவங்களை மனைவியிடம் விவாதிக்காதீர்கள். அவரின் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள்.   
 
28.8.2014 முதல் 02.12.2014 மற்றும் 22.12.2014 முதல் 4.7.2015 வரை தனாதிபதியும்-லாபாதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் மனஅழுத்தம், டென்ஷன் அதிகரிக்கும். சில சமயங்களில் தனிமைப்படுத்தப்பட்டதை போல் உணர்வீர்கள். பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சி செய்வார்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியை தவிர்ப்பது நல்லது. 
   
3.12.2014 முதல் 21.12.2014 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்குள்ளேயே கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால் வீண் விரையம், ஏமாற்றம், அல்சர், கை, கால், மூட்டு வலி, யாரை நம்புவது என்கிற குழப்பம் வந்து நீங்கும். 
 

குருபகவானின் வக்ர சஞ்சாரம்: 
 
22.12.2014 முதல் 17.4.2015 வரை குருபகவான் ஆயில்யம் நட்சத்திரத்திலும் 17.12.2014 முதல் 21.12.2014 வரை மகம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் திடீர் திருப்பம் உண்டாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். சிலர் வீடு மாற வேண்டுமென்று நினைப்பீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். புது பதவி, பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சிலர் வீட்டில் கூடுதலாக அறை அல்லது தளம் அமைப்பீர்கள். 
 
வியாபாரத்தில் சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். தேங்கிக் கிடந்த சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்று முடிப்பீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பு தந்தாலும் அவ்வப்போது முரண்டு பிடிப்பார்கள். புதிதாக அறிமுகமாகும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். கடையையும் நவீனமயமாக்குவீர்கள். சங்கத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் உங்களுக்கென்று தனி இடம் உண்டு. இரும்பு, உணவு, ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமெண்ட் வகைகளால் லாபம் கிடைக்கும். 
 
உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்பு கிடைக்கும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். மூத்த அதிகாரிகளுடன் சின்ன சின்ன முரண்பாடுகள் வந்துப் போகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்ததை முடிப்பீர்கள். வேற்றுநாட்டு நிறுவனங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். அரசுப் பணியாளர்கள் அலுவலக ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம் பழைய சம்பள பாக்கியும் கைக்கு வரும். 
 
கன்னிப் பெண்களே! பரபரப்பாக காணப்படுவீர்கள். எதிர்பார்த்தபடி நல்ல இடத்தில் வரன் அமையும். உயர்கல்வியில் விடுபட்ட பாடத்தை எழுதி வெற்றி பெறுவீர்கள். மாதவிடாய் கோளாறு, தூக்கமின்மை வந்து நீங்கும். பெற்றோரின் நீண்ட நாள் கனவுகளை நனவாக்குவீர்கள்.
 
மாணவ-மாணவிகளே! விளையாட்டுத்தனத்தை குறைத்து வகுப்பறையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கணிதம், மொழிப் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள்.   
 
கலைத்துறையினர்களே! உங்களை சிலர் விமர்சித்துப் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். அதையும் தாண்டி முன்னேறுவீர்கள். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் புது வாய்ப்புகள் வரும்.
 
இந்த குரு மாற்றம் சுபச் செலவுகளை தருவதாகவும் நட்பு வட்டத்தை விரிவடையச் செய்வதாகவும் உங்களுக்கு அமையும்.   
 
பரிகாரம்
 
திருச்செந்தூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசெந்தில் ஆண்டவரை உத்திராடம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் வணங்குங்கள். ஸ்ரீதட்சிணாமூர்த்தியை நெய் தீபமேற்றி வணங்குங்கள். பார்வையற்றவர்களுக்கு உதவுங்கள்.