வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

சனிப் பெயர்ச்சியால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க சனீஸ்வர காயத்ரி மந்திரம்..!

கிரகங்களில் வலிமையானவர், தர்மாதிகாரி, எம தர்மராஜனின் சகோதரர் இப்படி எல்லாச் சிறப்புகளையும் பெற்றவர் சனீஸ்வர பகவான். அவருக்கு  பயப்படாதவர்கள் கிடையாது. காரணம், நீதிமானுக்கு பயப்பட்டுத்தானே ஆகவேண்டும்.
கிரகங்களில் மெதுவாக நகரும் சனி, இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதனால் அவரை  மந்தன் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
 
மந்த கதியில் சென்றாலும், மெதுவாக நகர்ந்தாலும், இந்த புவியில் உள்ள மனிதர்களின் வாழ்வில் பலன்களை தமக்கே உரிய பாணியில் தந்தே தீருவார்.  முக்கியமாக சனிப் பெயர்ச்சியால் நாம் நலன்களைப் பெற வேண்டுமானால், சனீஸ்வர காயத்ரி மந்திரங்களை சொல்லி, அருகில் உள்ள சிவன் கோயில்களில்  உள்ள சனீஸ்வரர் சந்நிதியை வணங்குவது பலன் தரும்.

காய்த்ரி மந்திரம்: