1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (10:16 IST)

பாஜக கூட்டத்தில் ரௌடிகள் – கைது செய்யப்பட்டு அதிரடி நடவடிக்கை!

சென்னை வண்டலூரில் பாஜக சார்பாக நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த 6 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் பாஜகவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நிலையில் சந்தேகத்துக்கு இடமாக இருந்த 6 பேரை போலிஸார் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.

அங்கு அவர்கள் சொன்ன செய்தி போலிஸாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர்கள் ‘நாங்கள் பாஜகவில் சேரவந்தோம். அங்கு போலிஸ் இருந்ததால் கூட்டத்தின் அருகே செல்லாமல், தனித்து நின்றோம்.’ எனக் கூறியிருந்தனர். ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்ட கல்வெட்டு ரவி போன்ற ரௌடிகள் பாஜகவில் சேர்ந்தது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் இப்போது இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.