வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : புதன், 29 அக்டோபர் 2014 (22:34 IST)

நேரு குடும்பத்தை சாராதவர் தலைவர் ஆவார் என்ற ப.சிதம்பரத்தின் கருத்துக்கு கடும் கண்டனம்

நேரு குடும்பத்தை சாராதவர் தலைவர் ஆவார் என்ற ப.சிதம்பரத்தின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் துணை தலைவர் தாராசபி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
தமிழக காங்கிரஸ் துணை தலைவர் தாராசபி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
நேரு குடும்பத்தை சாராதவர் தலைவர் ஆவார் என்று ப.சிதம்பரம் பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது.
 
இது அவரது சொந்த கருத்து சோனியாகாந்தி ராகுல்காந்தியால் சிதம்பரம் மத்திய மந்திரியாக்கப்பட்டார். அவர் இப்போது இப்படி பேசி இருப்பதன் பின்னணியில் ஏதோ சதி இருக்கிறது. அதை அவர் தொண்டர்கள் மத்தியில் விளக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 
தாராசபி சிதம்பரம் ஆதரவாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.