1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 24 ஜூன் 2019 (21:18 IST)

கோவையில் இளம்பெண்ணுக்கு கத்திக் குத்து ..பகீர் சம்பவம்

கோவை மாவட்டம் ஆர்.எஸ் புரத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் இருந்து வெளியே வந்த இளம்பெண்ணை, சுரேஸ் என்ற வாலிபர் கத்தியால் குத்தினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் ஆர்.எஸ் புரத்தில் உள்ள ஒரு தனியார்  கணிணி பயிற்சி மையத்தில் இருந்து இளம்பெண் ஒருவர் வெளியே வந்தார். அப்போது அவரது காதலன் சுரேஸ் என்பவருக்கும் பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஸ் தன் கையில் வைத்திருந்த கத்தியால் அப்பெண்ணைக் குத்தினார். இதில் மாணவி காயம் அடைந்தார்.
 
இதை தடுக்க வந்த அருகில் இருந்த இரு மாணவரகளையும்  அவர் தாக்கியுள்ளதாகத் தெரிகிறது. அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது தப்பி ஓடிய சுரேஸை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில் இளம்பெண் மற்றும் சுரேஸ் ஆகிய  இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. தற்போது சுரேஸிட போலீஸாரெ தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.