1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 செப்டம்பர் 2020 (08:34 IST)

உன்ன விட மாட்டேன்டா.. ஆவியா வருவேன்! – தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் கடிதம்!

தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபரை ஆவியாக வந்து பழிவாங்குவேன் என கடிதம் எழுதிவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதாச்சலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 30 வயதான பெண் ஒருவர். இவருக்கு திருமணமாகி 9 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் கணவனை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் அந்த பெண்ணுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை ராஜேந்திரன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்த பெண் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் வீட்டில் ஆராய்ந்தபோது பெண் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் அந்த பெண் தான் இறந்து ஆவியாக வந்து ராஜேந்திரனையும், அவர் குடும்பத்தையும் பலி வாங்குவதாக எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் ராஜேந்திரனை கைது செய்துள்ள போலீஸார் அந்த கடிதம் இறந்த பெண் எழுதியதுதானா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.