வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 26 நவம்பர் 2015 (18:55 IST)

பணத்திற்காக கள்ளக்காதலுடன் சேர்ந்து தோழியை கொலை செய்த பெண்

நகை, பணத்திற்காக கள்ளக்காதலுடன் சேர்ந்து தோழியையே, பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

 
மதுரை தல்லாகுளம் பழைய அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பவித்ரா (23) மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது.
 
கணவர் ஜெயக்குமாருக்கு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டதை அடுத்து, பவித்ரா தனது மாமியார் ஜெயந்தியுடன் வசித்து வந்தார்.
 
இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி, கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பவித்ரா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இந்த கொலை குறித்து மாநகர் காவல்துறை ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவின்பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
 
விசாரணை முடிவில், செல்லூரைச் சேர்ந்த பெண் டெய்லர் சியாமளாவிற்கும், கொலை சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
சியாமளாவின் கணவருக்கு காசநோய் ஏற்பட்டதை அடுத்து சிகிச்சைக்கு அதிக அளவில் பணம் தேவைப்பட்டுள்ளது. இதற்கிடையில் சியாமளாவுக்கும், செல்லூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
 
ரமேஷ், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பது குறித்த திட்டத்தை கூறியுள்ளார். அதன்படி, சம்பவத்தன்று சியாமளா பவித்ரா வீட்டிற்கு சென்றுள்ளார்.
 
பின்னர், அவர்கள் திட்டத்தின்படி அவரை தொடர்ந்து ரமேஷ் வீட்டிற்கு வந்துள்ளார். ரமேஷை பார்த்து சியாமளா, தனது நண்பர் என்று கூறியுள்ளார்.
 
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சியாமளாவும், ரமேஷும் சேர்ந்து பவித்ராவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். பின்னர், அங்கிருந்த 10 பவுன் நகை மற்றும் ரொக்க பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.
 
இதனையடுத்து தற்போது டெய்லர் சியாமளா, அவரது கள்ளக்காதலன் ரமேஷ் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.