வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 27 அக்டோபர் 2014 (14:07 IST)

விதவைப் பெண்ணை மிரட்டிக் கற்பழித்த வாலிபர் தலைமறைவு

நித்திரவிளை அருகே தனியாக இருந்த விதவைப் பெண்ணை ஒரு வாலிபர் கற்பழித்து, தலைமறைவான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கிராத்தூர் பகுதியைச் சேர்ந்த அனிதா என்ற பெண் கணவரை இழந்தவர் ஆவார். இப்பெண் அப்பகுதியில் உள்ள ஒரு பால் பண்ணைக்குப் பால் கொண்டு சென்று விற்று வந்தார். இந்நிலையில், பால் பண்ணைக்குச் செல்வதற்காக வெளியே சென்ற போது அதேபகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் அனிதாவை தடுத்து நிறுத்தினார். மேலும் அனிதாவிடம்  தவறான முறையில் ஈடுபட்டுள்ளார்.
 
அப்போது அனிதா அவரிடம் இருந்து தப்பிக்க முயன்றார். தப்பிக்க முயன்றால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி அனிதாவைக் கற்பழித்துள்ளார், ராஜேஷ்.
 
இதுகுறித்து அனிதா, காவல் துறையில் புகார் கொடுத்தார். புகாரை விசாரித்த போது ராஜேஷ் தலைமறைவானது தெரியவந்தது. தலைமறைவான ராஜேசுக்கு இன்னும் திருமணமாகவில்லை. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவர், சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பினார். எனவே காவல் துறை ராஜேசின் பாஸ் போர்ட்டை முடக்கி வைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.