1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 19 டிசம்பர் 2017 (12:29 IST)

ஆர்.கே. நகர் எனும் மற்றும் ஒரு திருமங்கலம்...

மஹாத்மா காந்தியின் குரங்கு பொம்மைகள் சொல்லும் செய்தியைப்போல ஆர். கே நகரில் தேர்தல் ஆணையம் தமிழக மக்களுக்கு சொல்லும் செய்தி!


 
 

நாங்கள் பணப்பரிமாற்றத்தை கண்டு கொள்ளவே மாட்டோம்! கண்களை மூடிக்கொள்வோம்!
 
நாங்கள் பணப்பரிமாற்றத்தைப் பற்றி செய்திகளை கேட்கவே மாட்டோம் !  காதுகளை மூடிக்கொள்வோம் !
 
நாங்கள் பணப்பரிமாற்றத்தைப் பற்றி வாய் திறக்க மாட்டோம் ! வாயை  மூடிக்கொள்வோம் !
 
கண்கள்  திறந்து, வாய் திறந்து, காதுகள்  திறந்து ஆர். கே நகரில் தேர்தல் நடத்த மாட்டோம். 
 
உண்மையில் நக்ஸல்களும், மாவோக்களும், தீவிரவாதிகளும்  நிறைந்தப்பகுதிகளில் திறன்பட செயல்பட்ட இந்திய தேர்தல் ஆணையம் ! டி. என். சேஷன், லிங்டே போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் அதிகாரம் செய்த தேர்தல் ஆணையத்தின் நிலை பரிதாபம் !    ஆர். கே. நகரில் பரிதாபம் ! அந்தோ பரிதாபம்  !
 
திருமங்கலம் பார்முலாவுக்கும், ஆர். கே நகர் பார்முலாவுக்கும், ஒரே வித்தியாசம் ?  அங்க, அப்ப,  ஐநூறு  மழை ! இப்ப இங்க இரண்டாயிரம் மழை !
 
ஊர் எல்லாம் திருவிழாவாம் ! ஆர் கே நகரில் மட்டும் பண மழையாம் !
 
ஊர் எல்லாம் இரண்டாயிரம் நோட் மழையாம் ! 
 
தேர்தல் ஆணையத்தின் முந்தானையில்  மண் !     
 
தேர்தல் ஆணையம் என்ற ஒன்று ஆர். கே நகரில் உண்மையில் இருக்கிறதா ? வேலை செய்கிறதா ? கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேர்தல் ஆணையம் என்ற ஒன்றே இல்லை என்றே தோன்றுகிறது !
 
மோடி இந்த குஜராத் வெற்றியில் மகிழ்ச்சி அடைகிறாரா ? என்று நடிகர் பிரகாஷ்ராஜ் மோடியைப் பார்த்து கேட்டதுப் போல,   இந்த தேர்தல் ஆணையம் ஆர். கே நகர் தேர்தல் பணிகளில் திருப்தி அடைகிறதா ?
 
எங்கே பத்ரா?
 
எங்கே பத்ரா? தேர்தலை நடத்த வேண்டுமே என்ற கடமைக்கு தான் தேர்தல் நடத்துகிறீர்களா என்ன பத்ரா? கடமைக்கு தான் தேர்தல் நடத்துகிறீர்கள் என்றால்  அதற்கு நீங்கள் எதற்கு? அதற்கு  மாநில தேர்தல் ஆணையமே போதுமானதே ! நீங்கள் எதற்கு பத்ரா? 
 
எங்கே போனார்கள் தேர்தல் நுண் பார்வையாளர்கள்? திருதுராஷ்டிரன் போல குருடாகி போனார்களா அல்லது காத்தாரியைப்போல கண்களை கட்டி கொண்டார்களா?
 

 
 






இரா காஜா பந்தா நவாஸ்
[email protected]