1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (07:52 IST)

கேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் : விஜயகாந்த் அறிவிப்பு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிவாரண உதவிகள் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

 
கடந்த 100 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கேரளாவில் தென்மேற்கு பருவமழை பொழிந்தது. இதனால் அணைகள் நிரம்பி, உபரி நீர் திறக்கப்பட்டதாலும், நிலச்சரிவுகள் ஏற்பட்டும் மக்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர்.  
 
மழையின் காரணமாக 700-க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள். 1 லட்சம் பேர் அவர்கள் இருப்பிடத்தில் இருந்து மீட்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 
 
கேரள மாநிலத்திற்கு தமிழகத்திலிருந்து அரசியல் கட்சிகள் முதல் நடிகர்கள், பொதுமக்கள் என பலரும் உதவி செய்து வருகின்றனர். தமிழகத்திலிருந்து பலரும் அத்தியாவசப்பொருட்களை கேரள மாநிலத்திற்கு அனுப்பி வருகின்றனர்.
 
இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேரள மாநிலத்துக்கு உதவ முன் வந்துள்ளார். இதுபற்றி அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் தேமுதிக சார்பில் வழங்கப்படும். கேரளாவுக்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கிட வேண்டுமென தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்” எனக்குறிப்பிட்டுள்ளார்.
 
இதைக்கண்ட நெட்டிசன்கள் பலரும் விஜயகாந்தை மனமுவந்து பாராட்டி வருகின்றனர்.