1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 2 அக்டோபர் 2020 (09:46 IST)

கொரோனாவிலிருந்து குணமடைந்த விஜயகாந்த்! – தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி!

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்கள் முன்னதாக உடல்நல குறைவால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்துக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கும் கொரோனா இருப்பது தெரிய வந்தது.

இதனால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர்கள் பூரண நலம் பெற்றிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர். இருவரும் நலமுடன் திரும்பியிருப்பது தேமுதிகவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.