1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 2 ஜூன் 2021 (17:36 IST)

தமிழகத்தில் பல்வேறு போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

நெல்லைக்கு புதிய கமிஷனராக செந்தாமரை கண்ணன் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவர் கூவத்தூரில் சசிகலா நடத்திய அரசியல் விளையாட்டில் அதிரடியாக ரெசாட்டிற்குள் நுழைந்து விசாரணை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சில எம்.எல்.ஏ. வை மிரட்டி கூவத்தூர் விடுதியில் அடைத்து வைத்ததாக சசிகலா மீதும், அன்றைய முதல்வர் எடப்பாடி மீதும் துணிந்து வழக்கு பதிவு செய்தவர் இந்த செந்தாமரை கண்ணன்.