1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: திங்கள், 22 டிசம்பர் 2014 (16:27 IST)

தனது பாதுகாவலரை அடித்த வைகோ

கர்நாடகம் காவிரியில் புதிய அணைக் கட்டக் கூடாது, டெல்டாவில் மீத்தேன் எரிவாயு திட்டத்தை அமல்படுத்தக் கூடாது, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவாரூரில் திங்கள்கிழமை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார்.
 
அப்போது பிரசாரத்தை நிறைவு செய்து மேடையை விட்டு இறங்கிய வைகோவுக்கு, தொண்டர் ஒருவர் சால்வை அணிவித்த போது கழுத்து இழுக்கப்பட்டது. இதைப்பார்த்த வைகோவின் பாதுகாவலர் ஒருவர் சால்வை அணிவித்த தொண்டரை இழுத்து தள்ளினார். அப்போது வைகோ கோபத்தில் அவரை ஏன் தள்ளுகிறாய், பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள், அவர்கள் வைகோ ரவுடித்தனம் செய்கிறார் என செய்தி வெளியிடுவார்கள் என்று கூறி பாதுகாவலரின் நெற்றியில் குத்தினார்.