1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 24 நவம்பர் 2015 (10:16 IST)

வைகை ஆற்றின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணை வேகமாக நிரம்பி வருவதால், வைகை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


 

 
வைகை அணை தனது கொள்ளவான 71 அடியில் 66.8 அடியைத் தாண்டியுள்ளது. இதனால்,  வைகை அணையிலிருந்து, தண்ணீர் திறக்கப்படவுள்ளது.
 
இதனால் வைகை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், மற்றும் சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோறங்களில் வசிக்கும் மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.