1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: தேனி , செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (14:01 IST)

கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்து ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்லும் அவலம்!

தேனி மாவட்டம் கோட்டூர் எஸ்பிஎஸ் காலனி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது.
 
தற்பொழுது கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் வேளையில் கூட்டு குடிநீர் திட்ட குழாயை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆள் உயரத்திற்கு மேலே எழும்பி பீச்சு அடித்து வீணாக சாலை ஓரத்தில் தண்ணீர் வீணாக சென்று வருகிறது.
 
எனவே உடனடியாக கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிககை விடுத்து வருகின்றனர்.