1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 6 ஜூலை 2020 (11:53 IST)

கோவையில் கொரோனா பரிசோதனை முறைகேடு! – சோதனை மையங்களுக்கு அனுமதி ரத்து!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கோவையில் கொரோனா பரிசோதனை மையங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் தலைநகர் சென்னை தவிர மேலும் சில முக்கிய நகரங்களான மதுரை, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள தனியார் ஆய்வகங்களுக்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூரில் உள்ள நான்கு தனியார் கொரோனா பரிசோதனை மையங்கள் கொரோனா பரிசோதனையில் முறைகேடு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

அதை தொடர்ந்து உடனடி நடவடிக்கை மேற்கொண்ட தமிழக சுகாதார துறை உடனடியாக சம்பந்தபட்ட 4 ஆய்வு மையங்களுக்கும் கொரோனா பரிசோதனை அனுமதியை ரத்து செய்துள்ளது.