ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (07:18 IST)

தமிழகத்தில் கொரோனா 2வது அலை சாத்தியமா? அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்தியா உட்பட பல நாடுகளில் இரண்டாவது கொரோனா அலை பரவி வரும் நிலையில் தமிழகத்தில் இரண்டாவது கொரோனா அலை வீசுவதற்கான சாத்தியமில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியபோது இந்தியாவில் தடுப்பூசி அதிகமாக செய்யப்படுவதாக மத்திய அரசு கூறி வருகிறது. தடுப்பூசி போடுவது குறித்து யாரும் அச்சப்படவில்லை. மருத்துவர்களின் உரிய ஆலோசனை படி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்
 
தமிழகத்தில் இரண்டாவது அலை குறித்த யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் இரண்டாவது அளவிடுவதற்கான சாத்தியமே இல்லை என்றும் இங்கு உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சுகாதார பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றிய கொரோனாவுக்கு எதிரான இறப்பு விகிதத்தைக் குறைத்து விட்டார்கள் என்றும் எனவே இரண்டாவது அலை குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்