வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 17 நவம்பர் 2018 (20:42 IST)

பெட்ரோல் வாங்கச் சென்ற புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்!!!

கொல்கத்தாவைச் சேர்ந்தவர் அம்புஜ் கத்துட்யா( 27).கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஞ்சலி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். பின் இருவரும்  சென்னையில் வீடு எடுத்து வசித்து வந்தனர்.
இன்று தன் இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக தனது ஸ்கூட்டியில் சென்றுள்ளார். அப்போது  ஒரு அரசு பேருந்து அவருக்கு முன் சென்றுள்ளது. அதை ஓவர் டேக் எடுக்க நினைத்த அம்புஜ் பேருந்தின் வலபுறமாக முந்திச்செல்லும் போது சாலையில் இருந்த ஒரு கல் தடுக்கி கீழே விழுந்திருக்கிறார்.
 
அவருக்கு பின்னே வந்த அரசு பேருந்து சாலையில் விழுந்த அவர் தலை மீது பேருந்தின் சக்கரம் ஏறியதில் அவர்  நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

அம்புஜ் இறந்ததை கேள்விபட்ட அவரது தயார் மற்றும் மனைவி கதறி அழுத காட்சி அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வவக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.