1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 24 நவம்பர் 2023 (17:42 IST)

தாயை அடித்துக் கொன்று வீட்டிலேயே புதைத்த மகன் கைது!

மது குடிக்க பணம் தராததால் தாயை அடித்துக் கொன்று வீட்டில் குழிதோண்டிப் புதைத்த  மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொளார் கிராமத்தில் வசிப்பவர்  ராஜேந்திரன். இவார் தற்போது திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி. இத்தம்பதியரின் 2 வது மகன் ஷேவாக் (21வயது).

இவர் 5 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, வெளி மாவட்டங்களில்  கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில்,  கடந்த தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு வந்தவர், வெளியூர் செல்லவில்லை. வீட்டிலேயே இருந்து,  வீட்டில் உள்ளோரிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.

இத நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தன் தாயிடம் மது குடிக்க பணம் கேடுள்ளார். அவர் கொடுக்காததால், ஆத்திரத்தில் அவரை கட்டையால் தாக்கியுள்ளார். இதில், கஸ்தூரி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதையடுத்து வீட்டிற்குள்ளேயே அவர் குழி தோண்டி தாயின் சடலத்தை புதைத்துள்ளார்.

பின்னர், தன் தாயை காணவில்லை என  பல இடங்களில் தேடிப் பார்த்த  கஸ்தூரியின் மூத்த மகள் அளித்த புகாரில் போலீஸார் கஸ்தூரியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டில் கயிற்றால் கை, கால்கள் கட்டி போடப்பட்டிருந்த ஷேவாக்கை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.