1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 16 அக்டோபர் 2018 (18:36 IST)

வெளிநாட்டில் சின்மயி அம்மா அடித்த கூத்து....?

வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியதன் மூலம் மாபெரும் அளவில் பேமஸ் ஆன பாடகி சின்மயி தொடர்ந்து இது போன்ற குற்றங்களை தனது ட்விட்டரில் ஷேர் செய்து வருகிறார்.

 
அவர் ஆரம்பித்த இந்த பிரச்சனை இப்போது தமிழகத்தில் பெரிய பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில், வெளிநாட்டில் வைரமுத்து ஏற்பாடு செய்த இசை நிகழ்ச்சியில் அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டதாக  சின்மயி  கூறியிருந்தார். 
 
இந்நிலையில், தற்போது அந்த இசைக் கச்சேரியின் இசையமைப்பாளர் இனியவன் சின்மயி அம்மா குறித்து கூறியதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
 
சின்மயியின் அம்மா வெளிநாட்டில் வொயின் குடித்து ஆட்டம்  போட்ட ரகளையால் தான் அங்கு பெரிய பிரச்சனையே வந்தது. அந்த கொடூரத்தை பார்த்தவர்கள் எல்லாம்  என்ன இது என்று தலையில் அடித்துக் கொண்டனர். மேலும் மாணிக்க விநாயகம் கூட சின்மயி அம்மாவின் ரகளை ஆட்டத்தால் தெறித்து ஓடினர். அவர் ஒயின் அடித்து போட்ட ரகளை பெரிய பிரச்சனையாக இருந்தது என இனியவன் தெரிவித்திருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.