1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : வியாழன், 5 டிசம்பர் 2019 (17:45 IST)

சென்னை கடற்கரையில் வந்து குவியும் நுரை... மக்கள் அதிர்ச்சி

சென்னை பட்டிணப்பாக்கம் முகத்துவாரத்தில் சமீபகாலமாக நுரைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இந்த நுரை பட்டிணப்பாக்கத்தில் இருந்து திருவான்மியூர் கடற்கடை வரை பரவியுள்ளன. அதைப் பார்த்து அருகில் உள்ள மக்கள் மற்றும் சுற்றுலாவுக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், சென்னை மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், அடையாறு ஆறு கடலில் கலக்கும் பட்டிணப்பாக்கம் முகத்துவாரத்தில் இருந்த நீரை மாதிரியாக எடுத்து ஆய்வில் சோதனை செய்தனர்.
 
அதில்,   எண்ணெய் மற்றும் கிரீஸ் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொழிற்சாலைக் கழிவுகள் சுத்திகரிகரிக்கப்படாமல் ஆறில் விட்டதே காரணம் என தெரிவித்துள்ளனர்.
 
மேலும், இந்தக் கழிவுகளைக் கலக்க காரணமான தொழிற்சாலைகளைக் கண்கானிப்பதாகௌவ்ம் அதிகாரிகள் கூறியுள்ளனர்.