1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (19:44 IST)

’போக்சோ சட்டத்தில் ’திருத்தம் கொண்டுவர அரசுக்கு நீதிமன்றம் அறிவுரை

16 வயதுக்கு மேல் விருப்பத்துடன் உறவு கொண்டால் குற்றமாகாத வகையில் திருத்தம் தேவை என்று உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுரை கூறியுள்ளது.
18 வயதுவரை உள்ள சிறுமிகள் என வரையறுத்துள்ளதை 16 வயதாக குறைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
 
தற்போது இதுகுறித்து நீதிமன்றம் கூறியுள்ளதாவது : 
 
16 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பத்துடன் பாலுறவு கொண்டால் குற்றமாக கருதாத வகையில் திருத்தம் தேவை என்றும், போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.