வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sasikala
Last Modified: புதன், 14 ஜூன் 2017 (17:42 IST)

தனது நாய்க்காக தேம்பி தேம்பி அழுத சிறுவன் - வைரல் வீடியோ!

சிறுவன் ஒருவன் தான் வளர்த்து வந்த இன்னொரு உயிருக்காக சிந்தும் கண்ணீர் கதறல் பார்ப்பவர் அனைவரின் கண்களையும் கலங்க வைத்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
சுயநலம் மிக்க இவ்வுலகில் தான் வளர்த்த செல்லப்பிராணியான நாய் வாகனத்தில் அடிபட்டதால் உயிரிழந்துள்ளது. ஆனால்   சிறுவனே உயிரற்று கிடக்கும் நாயினை விட்டுச் செல்ல மனமில்லாமல் கதறி அழும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.  தந்தை, தாயின் மரணத்திற்காக கூட கலங்காத நபர்கள் இருக்கும் உலகத்தில், தனது செல்லப்பிராணிக்காக கண்ணீர் விடும்  சிறுவனின் அழுகை அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கிறது.