1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 3 ஜூலை 2019 (08:51 IST)

ஓபிஎஸ்-க்கு பயம் காட்ட துவங்கிய தங்க தமிழ்ச்செல்வன்: திமுக ஃபுல் சப்போர்ட்!!

தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்த கையோடு ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான வழக்கை திமுகவின் முழு ஆதரவோடு கையில் எடுத்துள்ளார். 
 
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத்தில் நடந்த போது ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். 
 
இதனால், அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்ட 11 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த இரண்டு நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில், ஓபிஎஸ் தரப்பினருக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் இந்த வழக்கை விரைவாக விசாரணை செய்ய வேண்டும் என்று திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் தரப்பில் இருந்து கோரிக்கை மனு தாக்கல் செய்தார். 
 
எனவே, இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை இன்றே எடுத்து கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.