1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: சனி, 23 ஆகஸ்ட் 2014 (12:49 IST)

ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள் - தமிழக அரசு விற்பனை செய்கிறது

மொத்தம் ரூபாய் ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டு காலப் பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 
 
இந்த ஏலம், இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை - கோட்டை அலுவலகத்தில் ஆகஸ்ட் 26, 2014, அன்று நடத்தப்படும். போட்டி ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து பிற்பகல் 12.00 மணிக்குள்ளாகவும் போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில்  [Reserve Bank of India Core Banking Solution(E-Kuber) System] மின்னணு படிவத்தில் (Electronic format) ஆகஸ்ட் 26, 2014 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். 
 
இதனைத் தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் க. சண்முகம் தெரிவித்துள்ளார்.