1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: ஞாயிறு, 7 பிப்ரவரி 2016 (23:13 IST)

உஷ்.... அப்பாடா தேர்தல் களத்தில் குதித்த காங்கிரஸ்

உஷ்.... அப்பாடா தேர்தல் களத்தில் குதித்த காங்கிரஸ்

மிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலுக்கு  விருப்பமனு வாங்கும் தேதியை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
 

 
இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
 
தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக வேட்பாளராக போட்டியிட விரும்புகிறவர்கள் தங்களது விருப்ப மனுவை வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை சென்னை, சத்தியமூர்த்தி பவனில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
 
வேட்பாளர் விண்ணப்பப் படிவத்தை பெற ரூ.100 செலுத்த வேண்டும். சட்டமன்ற பொதுத் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் வேட்பாளர் விண்ணப்ப கட்டணமாக ரூ.5000, பெண்கள் மற்றும் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு ரூ.2500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில், ஏற்கனவே, அதிமுக, திமுக, தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் எல்லாம் தேர்தல் விருப்பமனு வாங்கும் படலம் நடைபெற்றுவருகிறது.