1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 16 ஜூலை 2021 (14:20 IST)

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை எச்சரிக்கை

தமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்யும் இடங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி இன்று குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி தமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று, நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 
 
இதேபோல சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சில பகுதிகளில் மிதமான மலைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.