1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 5 அக்டோபர் 2015 (06:57 IST)

வேர்களைத் தேடி: தேர்தல் சுற்றுப் பயணத்திற்கு தயராகும் திருமாவளவன்

தமிழகம் முழுவதும் வேர்களைத் தேடி என்ற  பெயரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
 

 
இது குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு நெருக்கமான கட்சி நிர்வாகிகள் சிலரிடம் பேசிய போது,  விரைவில் சட்ட மன்றத் தேர்தல் வர உள்ளது. தற்போது, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போன்றவர்கள் எல்லாம் சட்ட மன்ற தேர்தலுக்கு தயராகும் வகையில் அரசியல் பிரசாரம் மற்றும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர் . ஆனால், இதுவரை  எங்கள் தலைவர் திருமாவளவன் அதில் பெரிதாகக் கவனம் செலுத்தவில்லை.
 
எனவே, நவம்பர் மாதம் முதல் மாவட்டம் தோறும் சுற்றுப் பயணம் செய்து உறுப்பினர்களைச் சந்திக்க உள்ளார். இதனையடுத்து,  சட்ட மன்றத் தொகுதிவாரியாகப் பொறுப்பாளர்களை நியமிக்க உள்ளார். பின்பு,  வேர்களைத் தேடி என்ற பெயரில் தமிழகம் முழுதும் சுற்றுப் பயணம் செய்ய உள்ளார் என்றனர். ஆக, சட்ட மன்றத் தேர்தலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தயராகிவிட்டது என்பதே உண்மை.