ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 21 ஜூன் 2022 (08:09 IST)

தமிழக முதல்வர் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு: விருதுநகர் நபர் கைது!

arrest
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குறித்து விருதுநகர் நபர் ஒருவர் அவதூறு கருத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் என்ற பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்தைப் பரப்பி வருவதாக தெரிகிறது.
 
இதனை அடுத்து திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் திருத்தங்கல் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் போலீசார் நாகராஜ் அவதூறு கருத்துக்களை பரப்பி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். 
 
இதனையடுத்து கைது செய்யப்பட்ட நாகராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.