ஜெ. மரணம் குறித்த வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இதனை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என கோறி மனு ஒன்று அளிக்கப்பட்டது.
ஆனால், இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு குறித்த மனுவை சசிகலா புஷ்பா தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா 75 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நல குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 5 ஆம் தேதி மரணமடைந்தார்.
அவர் மருத்துவமனையில் இருந்த போதும், மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் எந்த ஒரு தகவளும் வெளியாகவில்லை, எனவே ஜெயலலிதா மர்ணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சிபிஐ வழக்கு விசாரணைக்கு மனு கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.