1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : சனி, 5 செப்டம்பர் 2015 (10:56 IST)

மாமனார் மாமியாரை குடிசையில் வைத்து எரித்த மருமகன்

தூத்துக்குடியில் மருமகனே தனது மாமனார் மற்றும் மாமியாரை உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தூத்துக்குடி கே.டி.சி நகரைச் சேர்ந்தவர் பிரசாத். இவர் தனது மாமனார் வீட்டிலேயே மனைவியுடன் தங்கியிருந்தார். இவர் ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி உடல் நலக்குறைவு காரணமாக அவரது அக்காள் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
 
குடிபோதையில் நேற்று வீடு திரும்பிய பிரசாத் தனது மாமனார், மாமியாரிடம் தகராறு செய்துள்ளார். அவர்கள் பிரசாத்தை கண்டித்துள்ளனர்.
 
பின்னர் அவர்கள் இருவரும் தூங்கிவிட்டனர். நள்ளிரவு 1 மணியளவில் வீட்டு வாசலில் படுத்திருந்த பிரசாத் குடிசை வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.
 
இதில் அவரது மாமனார், மாமியார் இருவதும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் பிரசாத் காவல்துறையினர் சரண் அடைந்தார்.