வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: திங்கள், 20 ஏப்ரல் 2015 (18:32 IST)

கணவன் கைவிட்டார், கள்ளக்காதலன் ஏற்கவில்லை: தீக்குளித்த பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம்

பாளையங்கோட்டையில் கள்ளக்காதலனும் ஏற்க மறுத்ததால் தீக்குளித்தேன் என்று இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
பாளையங்கோட்டை கனக நாயனார் கம்புகிடை தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி தீபா(24). இவர்களுக்கு தர்ஷினி என்ற 2 வயது குழந்தை உள்ளது. பாளை தியாகராஜ நகரில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் தீபா வேலை செய்து வந்தார். இந்நிலையில் தீபாவிற்கும், கீழநத்தத்தை சேர்ந்த வெற்றிவேல்(22) என்பவருக்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. வெற்றிவேல் பெருமாள்புரத்தில் உள்ள சவுண்ட் சர்வீஸ் கடையில் வேலை செய்து வருகிறார். இவர்களது கள்ளக்காதல் முருகனுக்கு தெரியவந்ததால் கண்டித்துள்ளார். இதனையடுத்து கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவியை பிரிந்து சென்றுவிட்டார். தீபா அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
 
இந்நிலையில் தீபா வெற்றிவேலிடம் நமது பழக்கத்தால் என் கணவர் பிரிந்து சென்றுவிட்டார். குழந்தையும் நானும் தனியாக உள்ளோம். நீதான் என்னை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று கூறினார். அதற்கு வெற்றிவேல் மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த தீபா நேற்று காலை வெற்றிவேல் வேலை செய்யும் பெருமாள்புரத்தில் உள்ள சவுண்ட் சர்வீஸ் கடையின் முன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். நெல்லை அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இந்த நிலையில், மாஜிஸ்திரேட்டிம் தீபா அளித்துள்ள வாக்குமூலத்தில், வெற்றிவேல் அம்மாவுக்கும், எனது அம்மாவுக்கும் உள்ள பழக்கத்தில் எனது வீ்ட்டிற்கு வெற்றிவேல் அடிக்கடி வந்து சென்றார். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. நான் அவரை உயிருக்கு உயிராக நேசித்தேன். அவரும் என்னுடன் அன்பாக பேசினார். அவரை என்னால் மறக்க முடியவில்லை. அவருடன் சேர்ந்து வாழ விரும்பினேன். இதனால் எனது கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அவர் பிரிந்து சென்று விட்டார். இதனையடுத்து என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வெற்றிவேலிடம் கூறினேன். அவர் மறுத்துவிட்டார். கணவர் பிரிந்துவிட்ட நிலையில், வெற்றிவேலும் ஏற்க மறுத்துவிட்டதால் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து தீக்குளித்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக பெருமாள்புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.