1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel

மாணவிகள் தற்கொலை- வி.சிக்கு தொடர்பு: ராமதாஸ்

மாணவிகள் தற்கொலை- வி.சிக்கு தொடர்பு: ராமதாஸ்

விழுப்புரம் அருகே உள்ள இயற்கை யோகா கல்லூரியில் பயின்ற 3 மாணவிகள் தற்கொலை விவகாரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளுக்கு தொடர்பு உள்ளதாக ராமதாஸ் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
இது குறித்து, பாமக நிறுனவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் மூவர் மர்மமாக இறந்து போன சம்பவம் தமிழக மக்களை பெரும் அச்சம் அடைய வைத்துள்ளது.
 
இந்த வழக்கில் தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அது என்னவென்றால், மாணவிகள்  தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், திட்டமிட்டே படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்று அவர்களின் உடற்கூறு அறிக்கையில் கூறப்பட்டிடுள்ளது தான் அதிர்ச்சிக்கு காரணம் ஆகும்.
 
இதன்மூலம் மாணவிகள் மூவரும் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
மாணவிகளை படுகொலை செய்தது யார் ? என்ற வினாவுக்கு விடை காண வேண்டும். மேமலும், மாணவிகளை யாரோ படுகொலை செய்துள்ளதாக அக்கல்லூரியின் நிர்வாகி வாசுகி கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாமல் இயற்கை மருத்துவக் கல்லூரியை நடத்தி வந்த வாசுகி குடும்பத்தார் பாதுகாப்புக்கு பெரு.வெங்கடேசன் என்ற கூலிப்படைத் தலைவனை நியமனம் செய்துள்ளனர்.
 
மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதல் வரிசைத் தலைவர்கள் சிலரும் சாதிப் பாசம் காரணமாக கல்லூரி நிர்வாகத்தின் அனைத்து முறைகேடுகளுக்கு துணை நின்றனர். அந்தக் கல்லூரி மீதான நடவடிக்கையை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
 
எனவே, கல்லூரி நிர்வாகத்திற்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையிலான இந்த தொடர்பு குறித்து தமிழக அரசு விரிவான விசாரணை நடத்தி அதை மக்க்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.