1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : வெள்ளி, 9 அக்டோபர் 2015 (13:57 IST)

விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 200 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

சென்னையில் விமான நிலையத்தில் மண்ணடியை சேர்ந்த இருவரிடம் இருந்து 200 நட்சித்திர ஆமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூபாய் 10 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று காலையில் சென்னை விமான நிலையத்திலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு செல்ல மலேசியன் ஏர்லைன்ஸ விமானம் நேற்று மதியம் புறப்பட  இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய மண்ணடியை சேர்ந்த கரீம் நவாஸ்,வியாசர்பாடியை சேர்ந்த ஜெய்பூதீன்  ஆகியோர் தயாராக இருந்தனர்.

விமான நிலையத்தில் சந்தேகம் படும் படி  இருவரும் நடந்துக்கொண்டதால் இருவரின் பைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டதில் 200 நட்சத்திர ஆமைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, இவர்கள் இரண்டு பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து ஆமைகளை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆமைகளின் மதிப்பு ரூபாய் 10 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது 2 பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள்  விசாரித்து வருகின்றனர்.